CRIME
ஐயோ கொடுமையே…! வெறும் அழுகிய உருளைக்கிழங்குக்காக இப்படியா செய்வான்..? 6 மாதக் குழந்தையைக் கிணற்றடிச் சுவரில் போட்டுத் துடிக்கத் துடிக்கக் கொன்ற தந்தை கைது… ஜார்க்கண்டில் அரங்கேறிய நெஞ்ச நடுங்க வைக்கும் கொடூரம்..!!
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிகாபாக் மாவட்டம் கட்கம்சண்டி காவல் நிலையத்திற்குட்பட்ட லுபுங் கிராமத்தில் மனிதத்தன்மையைக் குலைக்கும் ஒரு கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் அழுகிய உருளைக்கிழங்குகளை வீசுவது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில், ஆகாஷ் குமார் என்ற நபர் தனது 6 மாதக் கைக்குழந்தையைத் தரைமீது அடித்துக் கொன்றதாகக் கூறப்படும் இந்தச் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அழுகிய உருளைக்கிழங்கை அகற்றுவது குறித்த சாதாரண வாக்குவாதம் விபரீதத்தில் முடிந்து இந்த அவலம் நிகழ்ந்துள்ளது.
லுபுங் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் குமாரின் மனைவி நிராலி தேவிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையில் வீட்டில் அழுகிய உருளைக்கிழங்குகளை வீசுவது தொடர்பாகத் தகராறு நடந்துள்ளது. அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த ஆகாஷ் குமார் ஆவேசமடைந்து, அறையில் தூங்கிக் கொண்டிருந்த தனது 6 மாதக் குழந்தை ‘அன்ஷ்’-ஐத் தூக்கிக்கொண்டு வீட்டின் பின்னால் உள்ள கிணற்றின் அருகில் சென்று சிமெண்ட் நடைமேடையில் பலமாகத் தூக்கி வீசினார். இதனால் படுகாயமடைந்த பச்சிளம் குழந்தையை அவனது தாய் உடனடியாக ஹசாரிகாபாக் ஷேக் பிகாரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்; பின்னர் அங்கிருந்து ரிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது, மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
குழந்தையின் மரணத்தைத் தொடர்ந்து, தாய் நிராலி தேவி அளித்த புகாரின் அடிப்படையில் கட்கம்சண்டி காவல் நிலைய போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். புகாரின் பேரில் தீவிர நடவடிக்கை எடுத்த போலீசார், குற்றவாளியான தந்தை ஆகாஷ் குமாரைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாகக் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களின் பங்கு குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
