LATEST NEWS
வங்கிகளே உஷார்..! கடன் கொடுக்கும் முன் இதை செக் பண்ணலனா ஆப்பு… சொத்து அடமானக் கடன்களில் அதிரடி மாற்றம்..! பதிவுத்துறை வழங்கிய புதிய அறிவுறுத்தல்கள் என்ன..?!
தமிழ்நாட்டில் ஆன்லைன் பத்திரப்பதிவு முறை அமலில் உள்ள நிலையில், வங்கிகளுக்கு பதிவுத்துறை முக்கிய புதிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி, கடனுக்காக விண்ணப்பிக்கும் சொத்துகளின் வில்லங்கச் சான்றிதழை கடன் தொகை விடுவிப்பதற்கு முன் கட்டாயமாக சரிபார்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையானது, ஒரே சொத்தைக் காண்பித்து பல்வேறு வங்கிகளில் மோசடியாக பல கடன்களைப் பெறுவதையும், தவறான அடமான ஆவணங்களைப் பதிவு செய்வதையும் தடுக்கும் நோக்கில் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது.
