LATEST NEWS
திக் திக்… புதர்களுக்குள் இருந்து பாய்ந்த மரண அடி… அலறியடித்து ஓடிய மக்கள்… இரத்தக் களறியான கிராமத்தில் பதறவைக்கும் துயரம்..! நரவேட்டை ஆடும் வெறிபிடித்த சிறுத்தை..! உதய்பூரில் அரங்கேறிய பகீர் சம்பவம்!
ஜெய்ப்பூர் அருகே உள்ள உமர்தா கேடா கிராமத்தில், 18 மணி நேரத்திற்குள் சிறுத்தை நடத்திய தொடர் தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்ததோடு, நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை 45 வயதான லோகர் லால் மீனா என்பவரை சிறுத்தை தாக்கியதில், அவர் மகாராணா பூபால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து புதன்கிழமையன்று ஜக்கா, ஹிதேஷ், காலு மற்றும் லோக்ரி பாய் ஆகியோரைச் சிறுத்தை தாக்கியுள்ளது. காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கிராம மக்களிடையே கடும் பீதி நிலவுகிறது.
தாக்குதல்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 15 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50 பேரை நிர்வாகம் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளது. மேலும், குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். வனத்துறை தரப்பில் பொதுமக்கள் தனியாக நடமாட வேண்டாம் என்றும், பாதுகாப்புக்காகக் கைகளில் குச்சிகளுடன் குழுக்களாக மட்டுமே செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தப்பியோடிய சிறுத்தையைப் பிடிப்பதற்காகப் பிந்தர், குராபாத் மற்றும் உதய்பூர் சரக வனத்துறை ஊழியர்கள் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் நான்கு கூண்டுகள் வைக்கப்பட்டு, கேமரா பொறிகள் மூலம் சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வனவிலங்குப் பிரிவு குழுக்கள், துப்பாக்கிச் சுடும் வீரர்கள் மற்றும் பணியாளர்கள் இரவு பகலாக அப்பகுதியைக் கண்காணித்து வரும் நிலையில், சிறுத்தையைப் பிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
