LifeStyle
இறுதி வரை கையில் இருந்த ருத்திராட்சமாலை! எஸ்.பி.பியின் கடைசி நிமிடங்கள் : இதயத்தை ரணமாக்கும் சிகிச்சை வீடியோ
40 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டுலகின் முடிசூடா மன்னராக வலம் வந்த எஸ்பி பாலசுப்ரமணியம் இன்று மரணமடைந்தார். இதுவரை 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள எஸ்பிபி ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார்.
அவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள், இசைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்களும் சமூக வலைதளங்களில் எஸ்பிபி குறித்து பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்கும் காணொளிகள் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காணொளியில் எஸ்பிபி மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிரமப்படுகின்றார். கையில் வைரலாக மாலையை அணிந்திருக்கும் எஸ் பி பிசியோ தெரபிக்கான பயிற்சிகளை செய்கிறார்.
மேலும், அவரை உடன் இருக்கும் மருத்துவர்களும் உற்சாகப்படுத்தி பயிற்சியை செய்ய வைக்கின்றனர். அவரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடுகின்றார்கள். இந்த காட்சி ஒவ்வொரு ரசிகர்களின் இதயத்தையும் நொருங்க செய்துள்ளது. வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ
