Uncategorized
‘5 வயது சிறுமியை பெற்றோர்களிடம் ஒப்படைத்து விட்டு’…! ” இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தாய்”… ‘உறவினர்கள் 25 நபர்களால் அரங்கேறிய கொடூரம்’…?
சென்னை கே.கே.நகரை சேர்ந்த தம்பதிகள் இவர்களுக்கு 10 மற்றும் 5வயதில் இரு மகள்கள் உள்ளன மற்றும் ஒரு மகன் உள்ளார் நேற்றிரவு இரண்டாவது மகள் கழிவறைக்கு சென்று நீண்ட நேரமாகியும் வரவில்லை அதிர்ச்சியடைந்து கதவை திறந்த பார்த்தபோது மயங்கிய நிலையில் கிடந்தார் உடேன மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் பரிசோதித்த மருத்துவர் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தார்.
தகவலின் பேரில் போலீசார் சிறுமியின் பெற்றோர்களிடம் விரசனை மேற்கொண்டனர். அதில் சிறுமியின் தாய் கூறியது எனது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஏற்கனவே என்னக்கு திருமணமாகி
கருத்து வேறுபாட்டால் 1/12-வருடமாக கணவரை பிரிந்து வாழ்கிறேன். எனது பிள்ளைகளை என் அம்மா வீட்டில் விட்டுவிட்டு. நான் பாண்டிசேரிக்கு துணிக்கடையில் வேலை செய்துவந்தேன் அப்போது என்னுடன் வேலைபார்த்த நபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் திருமணம் செய்துகொண்டோம் . அதன் படி ஒரு மகன் பிறந்தார்.
பின்னர் வருடத்திற்கு ஒரு முறை பிள்ளைகளை பார்க்க ஊருக்கு செல்வேன் அப்போது 5வயதுடைய எனது இ ண்டாவது மகளை உறவினர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தனர். பின்னர் என் மகளை என்னுடன் அழைத்து வந்துவிட்டேன் பள்ளிக்கு சென்ற என்மகளை பார்த்த ஆசிரியர்கள் நடவடிக்கை மாற்றத்தை கண்டு விசாரித்தனர் பின்னர் நடந்ததை கூறினாள். அதன் படி ஆசிரியர்கள் பாண்டிசேரி குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் அளித்தனர். அதன்படி சுமார் 25நபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. பின்னர் அதில் 16நபர்கள் ஜாமினில் வெளிவந்தார்.
பின்னர் எனக்கும் என் குழந்தைகளுக்கு உயிருக்கு ஆபத்து என்பதால் சென்னைக்கு வந்துவிட்டோம். மேலும் பல நபர்கள் பாலியல் அத்து மீறல் செய்த்தால் சிறுமியின் பிறப்பு உறுப்பு பாதிக்கப்பட்டிருந்தது அதன் காரணமாக வயிற்று வலி ஏற்பட்டிருந்தது அதனால் சிறுமி இறந்துள்ளார்.
