LATEST NEWS
“அய்யோ கொடுமையே.. பள்ளியில் கொடுத்த மாத்திரையைச் சாப்பிட்ட20 மாணவர்களுக்கு நேர்ந்த அசுர விபரீதம்..!” 2 மாணவர்கள் துடிதுடித்துப் பலி… நெஞ்சை உலுக்கிய மாபெரும் சோக சம்பவம்..!!!
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் போலாபரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்குக் காலாவதியான மலேரியா மாத்திரைகள் வழங்கப்பட்டதால், இரண்டு மாணவர்கள் கொடூரமாக உயிரிழந்துள்ள நெஞ்சைப் பதறவைக்கும் விபரீதச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. ஏடபாகா மண்டலம் விசாபுரம் கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ள கொல்லகுப்பா கிராமப் பள்ளியில், பள்ளி ஊழியர்கள் தற்கொலைக்குச் சமமான முறையில் சுமார் 73 மாணவர்களுக்குக் குளோரோகுயின் மாத்திரைகளை விநியோகித்துள்ளனர். மாத்திரைகளைச் சாப்பிட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்களின் உடல்நிலை மோசமடைந்து, அவர்கள் அவசர அவசரமாக அண்டை மாநிலமான தெலுங்கானாவின் பத்ராச்சலம் மாவட்ட அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.
https://twitter.com/revathitweets/status/2094830263427903935/video/1
இருப்பினும், அந்த வீரியமிக்கக் குளோரோகுயின் மாத்திரைகளின் ஒவ்வாமை மற்றும் பக்கவிளைவுகள் காரணமாக இரண்டு பிஞ்சு மாணவர்கள் மருத்துவமனையிலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், தற்பொழுது சிகிச்சைப் பெற்று வரும் மாணவர்களில் ஐந்து பேரின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயருமோ என்ற மரண பயம் பெற்றோர்கள் மத்தியில் நிலவி வருகிறது. அண்மையில் பிரதமர் மோடியை விமான நிலையத் தொடக்க விழாவிற்காகப் பள்ளி மாணவிகள் ஆடல் பாடலுடன் வரவேற்ற அதே ஆந்திர மாநிலத்தில் தான் இந்த அராஜகம் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி நிர்வாகத்தின் இந்த அசாத்திய அலட்சியப் போக்கால் இரண்டு பிஞ்சு உயிர்கள் பறிபோயுள்ள இச்சம்பவம், தற்பொழுது மாநிலம் கடந்து நாடு முழுவதும் மாபெரும் கொந்தளிப்பையும், அதிகாரிகளுக்கு எதிரான கண்டனக் குரல்களையும் எழுப்பியுள்ளது.
