TRENDING
‘தலைப்பிரசவம் குழந்தை பிறந்த பின்… “மீண்டும் வீங்கிய வயிற் பெண்ணிற்கு” நேர்ந்த பரிதாபம்…! கடலூரில் நடந்த பரப்பரப்பு…?
தலை பிரசத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவரர்களின் கவனக்குறைவால் உயிர் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது விருத்தாசலத்தில். கடலூர் மாவட்டத்தின் கலர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (27). இவருடைய மனைவி பிரியா (24). பிரியாவிற்கு தலை பிரசவத்திற்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டார் .
மேலும் அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் அழகான பெண் குழந்தை பிறந்தது . அவர்கள் இருவரும் சில நாட்கள் மருத்துவ மனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து உள்ளார். அப்படி இருக்கும் நிலையில் ப்ரியாவின் வயிறு நாட்கள் செல்ல செல்ல பெரிதாகி கொண்டு இருந்தது. மேலும் அவரது உடல் நிலை படுமோசமாய் மாறி கொண்டு இருந்ததால் பிரியா புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையின் பேரில் அனுமதிக்கபட்டார். அங்கு அவருக்கு தீவிர மருத்துவ சிகிச்சை கொடுத்ததும் அவர் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி உயிர் இழந்து விட்டார் .
இதனால் அவரது உடல் பிரேத பரிசோதனையில் தான் அதிர்ச்சியான செய்தி வெளியானது. அதில் ப்ரித்வின் அறுவைசிகிச்சயில் மருத்துவர்களின் கவனகுறைவால் ப்ரியாவின் வயிற்றில் பழைய துணி மற்றும் பஞ்சுகளை வைத்து தைத்து உள்ளனர் . அதனால் தான் அவர் உயிர் இழந்து உள்ளார் என்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்ததால். ப்ரியாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையின் முன்பு போராட்டம் நடத்தினர்.
மருத்துவர்களுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் என்று . இதனை அறிந்த காவல் துறையினர் விரைந்து வந்து அவரகள் புகாரை ஏற்று கொண்டு போலீசார் நடவடிக்கை எடுபோம் என்று சொன்னதால் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉளள்து.