என்னது… வெயில் அதிகமானா குறைப்பிரசவம் ஆகுமா..? தாய்மார்களுக்கு வெளிவந்த பேரதிர்ச்சி..! கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை.!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னது… வெயில் அதிகமானா குறைப்பிரசவம் ஆகுமா..? தாய்மார்களுக்கு வெளிவந்த பேரதிர்ச்சி..! கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை.!!

Published

on

தென் மாநிலங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் சுட்டெரிக்கும் வெப்பம் கவலையை ஏற்படுத்தி வருகிறது. நாட்டின் பல்வேறு இடங்களில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை எட்டியதால், கடுமையான வெப்பத்தாக்குதல் காரணமாகப் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில், சுட்டெரிக்கும் கடுமையான வெப்பமும் புழுக்கமும் கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தில் பெரும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகச் சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

சுமார் 2,09,266 கர்ப்பிணிப் பெண்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு அறிக்கை தொகுக்கப்பட்டுள்ளது. இதில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகளின் தரவுகளும் பகுப்பாய்வு செய்யப்பட்டன. கர்ப்ப காலத்தில் தாய் அதிகளவு சூரிய ஒளியிலும் வெப்பத்திலும் இருக்கும்போது, குறைந்த எடையுள்ள குழந்தை பிறப்பதற்கான அபாயம் அதிகரிக்கிறது. குறிப்பாக, கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் கடுமையான வெப்பத்திற்கு ஆளாவதால் குறைப்பிரசவம் (Premature Birth) ஏற்படும் அபாயம் அதிகம் என இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

Advertisement

அதேபோல, கர்ப்பத்தின் 2-வது மற்றும் 3-வது மாதங்களில் கடுமையான வெப்பத்திற்கு ஆளாவதும் குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் சூரியக் கதிர்வீச்சு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு கணக்கிடப்படும் இந்திய வெப்பக் குறியீடு, கர்ப்பிணிகள் எதிர்கொள்ளும் உண்மையான வெப்ப அழுத்தத்தைத் துல்லியமாக மதிப்பிட உதவுகிறது. எனவே, வெயில் காலங்களில் கர்ப்பிணிப் பெண்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in