LATEST NEWS
எங்க சொசைட்டில… புது நதி திறந்தாச்சு மக்களே..! கழுத்தளவு வெள்ளத்தில் நின்று கெத்து காட்டிய..! குஜராத் இளைஞரின் வைரல் வீடியோ..!!
குஜராத்தின் வல்சாட் பகுதியில் பந்தன் வங்கியில் பணிபுரியும் சிவம் சிங் என்ற நபர், கனமழையால் தனது குடியிருப்புப் பகுதி எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் படம்பிடித்து வெளியிட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர் பருவமழையின் காரணமாக அவரது குடியிருப்பு வளாகத்தைச் சுற்றிப் பல அடி உயரத்திற்கு வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், அவர் கழுத்தளவு நீரில் நின்றபடியே அந்த மோசமான சூழ்நிலையைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்தக் காணொளியில், தெருக்களும் திறந்தவெளிகளும் நீரின்கீழ் மூழ்கிச் சாலைகளே அடையாளம் தெரியாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள், சுற்றுச்சுவர் மற்றும் கட்டிடங்களின் மேல் பகுதிகள் மட்டுமே வெளியே தெரியக்கூடிய நிலையில், இந்தச் சிரமமான சூழலிலும் சிவம் சிங் நகைச்சுவையாக, “இதுதான் எங்கள் சொசைட்டி, இங்கு ஒரு புதிய நதியே திறக்கப்பட்டது போல் தெரிகிறது” என்று விவரிக்கிறார்.
https://www.instagram.com/reel/DbHpGCfI0_Q/?utm_source=ig_web_button_share_sheet
இணையத்தில் வெளியான இந்தக் காணொளி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு நபர் நின்றால் மூழ்கும் அளவுக்குக் குடியிருப்புப் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதைப் பார்த்த நெட்டிசன்கள், அப்பகுதியின் நகர்ப்புறக் கட்டமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பின் பராமரிப்பின்மை குறித்துக் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், உள்ளாட்சி அதிகாரிகள் உடனடியாக உரிய நிவாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
