LATEST NEWS
கணவரின் பிறந்த நாளுக்கு வேற லெவலில் சர்ப்ரைஸ் கொடுத்த ஆலியா மானசா.. இப்படி ஒரு பரிசா?.. சஞ்சீவ் வெளியிட்ட புகைப்படம்..!!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் இருவரும் சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள்.அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாடு என்ற நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளராக கலந்துகொண்டார் ஆலியா மானசா.
அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் சஞ்சீவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தனர். மேலும் சீரியலின் போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதே சமயம் ஒரு யூட்யூப் பக்கமும் திறந்து அதில் தங்களின் குடும்பத்தில் நடைபெறும் விஷயங்கள் குறித்த வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சஞ்சீவ் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் அவரின் மனைவியும் நடிகையுமான ஆல்யா மானசா தனது கணவருக்கு காரை பரிசாக வழங்கியுள்ளார். அந்த கார் மீது அமர்ந்து சஞ்சீவ் புகைப்படம் எடுத்து அதனை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க