LATEST NEWS
பரபரப்பு..! நம்பிக்கையை வித்து பதவி வாங்கும் நச்சுப்பாம்புகள்… ராகுல் காந்தி மற்றும் தவெக-வை ஒரே பதிவில் வெளுத்து வாங்கிய திமுக எம்.பி.!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை “நம்பிக்கையை விற்று பதவியை வாங்கும் நச்சுப்பாம்புகள்” என்று திமுக எம்பி தயாநிதி மாறன் மறைமுகமாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு வந்து அரசியல் பாடம் எடுத்த ஒருவரைப் பற்றிப் படித்தபோது, இந்த துரோகங்கள் அனைத்தும் வரிசையாக நினைவுக்கு வந்ததாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது பதிவில், பாரதிய ஜனதா கட்சியின் குதிரைப் பேரங்களை வழக்கம் போல் கண்டிக்கின்றவர்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் அருவருப்பான குதிரைப் பேரங்களைக் கண்டுகொள்ளாமல் மௌனம் காப்பது துரோகத்தின் தொடர்ச்சியே ஆகும் என்று சாடியுள்ளார். இந்த விமர்சனம் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் காரசாரமான அரசியல் விமர்சனப் பதிவின் முடிவில், தனது கருத்துக்களுக்கு ஆதாரமாகவும் நன்றியாகவும் “கலைஞர்” என்று தயாநிதி மாறன் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளையும் ஒரே நேரத்தில் தாக்கிப் பேசியுள்ள அவரது இந்த அறிக்கை, கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி அரசியலில் விவாதங்களை கிளப்பியுள்ளது.
