LATEST NEWS
“விஜய் ஆட்சியை கவிழ்க்க சதி நடக்குது” அரசு அதிகாரிகளின் ரகசிய வேலையை அம்பலப்படுத்திய வைகோ.. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு..!!
தமிழக முதல்வர் விஜய்யின் ஆட்சியை கவிழ்க்க திரைமறைவில் பெரும் சதி நடந்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், அரசு நிர்வாகத்தில் ஊழலை அறவே ஒழிக்க வேண்டும் என்ற தூய்மையான நோக்கத்தில் முதல்வர் விஜய் தீவிரமாக முயற்சி செய்து வருவதாகக் குறிப்பிட்டார். ஆனால், முந்தைய காலகட்டங்களில் அரசுத்துறைகளில் கோடிக்கணக்கில் ஊழல் செய்து பழகிய சில அதிகாரிகள், தற்போதைய தவெக அரசை ஸ்தம்பிக்க செய்யும் நோக்குடன் திட்டமிட்டுச் செயல்படுவதாக வைகோ சாடியுள்ளார்.
அரசு நிர்வாகத்தை முடக்குவதற்காக, மக்கள் நலன் சார்ந்த முக்கிய கோப்புகளை (Files) அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தாமல் சில அதிகாரிகள் வேண்டுமென்றே முடக்கி வைத்துள்ளதாக வைகோ சுட்டிக்காட்டியுள்ளார். விஜய்யின் நல்லாட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இந்த சதி வேலைகள் அதிகாரிகள் மட்டத்தில் அரங்கேறி வருவதாக அவர் எச்சரித்தார். இத்தகைய அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் அரசு இயந்திரத்தின் வேகம் குறைந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்படுகிறது.
இந்த சதியை முறியடிக்க முதல்வர் விஜய் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். மக்கள் பணிகளை முடக்கும் ஊழல் அதிகாரிகளை உடனடியாகப் பணியில் இருந்து விடுவித்துவிட்டு, அவர்களுக்குப் பதிலாக நேர்மையான மற்றும் திறமையான அதிகாரிகளை முக்கிய பொறுப்புகளில் நியமிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வைகோவின் இந்த அதிரடி பேச்சு தவெக அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இடையே உள்ள நிர்வாக ரீதியான சவால்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
