LATEST NEWS
“என் மகன் இப்படித்தான் இருக்கணும்”.. 3 வயசுல சொன்னது இப்ப அப்படியே நடந்துருச்சு… விபரீதத்தில் முடிந்த நடிகர் ஷாருக்கானின் ஆசை..!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஷாருக்கான். இவர் தற்போது ஜவான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனிடையே ஷாருக்கான் கௌரி கான் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். இருவரும் தங்கள் மகன் பிறந்து இரண்டு மாதங்கள் ஆனபோது அடித்த பேட்டியில், ஷாருக்கான் நகைச்சுவையாக கூறிய விஷயம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
அதாவது தன்னுடைய மகன் பெண் பித்தனாக இருக்கலாம். விரும்பும் அளவிற்கு புகை பிடிக்கலாம். பெண்களுடன் உறவு கொள்ளலாம். அப்படித்தான் நாங்கள் வளர்க்கப் போகிறோம் என்று ஷாருக்கானும் அவரது மனைவியும் கூறிய நிலையில் இதனை கேட்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அதுமட்டுமல்லாமல் தான் செய்யாத அனைத்தையும் என்னுடைய மகன் செய்ய வேண்டும் என்று ஷாருக்கான் நகைச்சுவையாக கூறினார். அன்று சாருக்கான் நகைச்சுவையாக கூறியது தற்போது விபரீதமாக மாறிவிட்டது.
அதாவது கடந்த சில வருடங்களுக்கு முன்பு போதை பொருள் வைத்திருந்ததாக ஷாருக்கான் மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் வைரலானது. அதன் பிறகு பல மாதங்கள் கழித்து ஷாருக்கான் மகன் வெளியே வந்த நிலையில் பெண்களுடன் பார்ட்டியில் கலந்து கொள்வது தொடர்பான பல புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் ஷாருக்கான் தனது மகனுக்கு மூன்று வயது இருக்கும்போது காமெடியாக சொன்ன விஷயம் தற்போது நிஜத்திலும் அப்படியே நடந்து கொண்டிருப்பதாக பலரும் கலாய்த்து இந்த செய்தியை வைரலாக்கி வருகிறார்கள்.