LATEST NEWS
அப்படி மட்டும் என் கணவர் கேட்டதே இல்லை.. அதை எனக்கு சொல்லி கொடுத்தாரு.. ஓபன் ஆக பேசிய நடிகை நயன்தாரா..!!

முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நடிப்பில் பிஸியாக இருந்தாலும் நயன்தாரா மற்றொரு பக்கம் பிசினஸில் இறங்கிவிட்டார். கடந்த ஆண்டு நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.
அதன் மூலம் தொழில் முனைவோராக நயன்தாரா தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு அவர்களது நிறுவனத்தின் சானிட்டரி நாக்கினை அறிமுகப்படுத்தியுள்ளனர். அவர்களது நிறுவனத்தின் சானிட்டரி நாப்கின் நல்ல விற்பனையானது. இதற்காக வெற்றி விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா, இது ரொம்ப சுயநலமா இல்லையான்னு சில பேர் கேப்பாங்க. இதுல சுயநலம் இருக்கு. ஆனால் சுயநலத்திற்கு பின்னாடி இருக்கிற பொது நலம்தான் அதை நியாயப்படுத்துகிறது.

#image_title
நாங்க சமூக அக்கறையோடு இருக்க வேண்டும் என நினைக்கிறோம். எல்லாருக்கும் இது ஒரு தொழில்தான். எல்லாருக்குமே பணம் வருது. அது சந்தோஷமான விஷயம் தான். ஒவ்வொரு பெண்ணும் தங்கள் வீட்டில் இருக்கும் அப்பாவிடம் அண்ணனிடமோ காசு வேண்டும் என கேட்க தேவையே இல்லை. ஏனென்றால் உங்களுக்கு தேவையானதை நீங்களே பண்ணுகிறீர்கள்.

#image_title