சின்னத்திரை சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை தான் ஆயிஷா. இவர் முதல் முதலாக பொன்மகள் வந்தாள் என்ற சீரியலில் அறிமுகமான நிலையில் அந்த சீரியலில் இயக்குனருடன் ஏற்பட்ட சிறிய பிரச்சனை காரணமாக சீரியலை விட்டு விலகினார்.
அதனைத் தொடர்ந்து மாயா சீரியலில் நடித்த இவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமாகிவிட்டார். இதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.
இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் அண்மையில் முடிந்த பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இவர் கலந்து கொண்டார். அதில் அவர் ஓரளவிற்கு நன்றாக விளையாடி மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தன்னுடைய காதலர் பற்றி ஆயிஷா அறிவித்த நிலையில் அவர் யாரென்று கூறவில்லை.
இந்நிலையில் ஆயிஷா அவரது காதலர் புகைப்படத்தை வெளியிட்டு காதலர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க