CRIME
“ஆளுக்கு 500 ரூபாய் கொடுத்துக் கூட்டத்தைக் கலைங்க” தவறாக ஆணுறுப்பு துண்டிக்கப்பட்ட சிறுவன் விவகாரத்தில் மருத்துவர்களின் சதி ஆடியோ வைரல்.. பெரும் அதிர்ச்சி..!!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் சிறுவன் ஒருவனின் ஆணுறுப்பை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதையடுத்து, பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், “ஆளுக்கு 500 ரூபாய் கொடுத்துக் கூட்டத்தைக் கலைத்துவிடலாம்” என மருத்துவர்கள் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தை திசைதிருப்ப நினைத்த மருத்துவர்களின் இந்த செயலைத் தொடர்ந்து, காவல்துறை மற்றும் மருத்துவத் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
