“நீ ரொம்ப அழகா இருக்க!”.. ஆசை வார்த்தை கூறி சப்-இன்ஸ்பெக்டர் செய்த அதிர்ச்சி வேலை… எஸ்பி ஆபீசில் பெண் கொடுத்த அதிரடி புகார்! – cinefeeds
Connect with us

CRIME

“நீ ரொம்ப அழகா இருக்க!”.. ஆசை வார்த்தை கூறி சப்-இன்ஸ்பெக்டர் செய்த அதிர்ச்சி வேலை… எஸ்பி ஆபீசில் பெண் கொடுத்த அதிரடி புகார்!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், கணவனுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு குறித்துப் புகார் அளிப்பதற்காகக் காவல் நிலையம் சென்ற பெண் ஒருவரை, அங்குப் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் நரேஷ் பாபு என்பவர் பாலியல் வன்கொடுமை மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவல் நிலையம் வந்த பெண்ணிடம் முதலில் ஆறுதலாகப் பேசிய சப்-இன்ஸ்பெக்டர், அவருக்கு ஒரு வேலை வாங்கித் தருவதாகவும், தனியாகத் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். மேலும், “நீ மிகவும் அழகாக இருக்கிறாய்; உனக்காக என் மனைவியைக் கூட கைவிடத் தயார்” என்று கூறி, கடந்த ஓராண்டாகத் திருமணப் பொய் வாக்குறுதிகளை அளித்து அந்தப் பெண்ணைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

இந்தச் சூழலில், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண் நேற்று மாலை 4 மணியளவில் மாவட்ட எஸ்.எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், குற்றம் சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் நரேஷ் பாபு, அவரது மனைவி மற்றும் மகன்கள் மீது உடனடியாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த எஸ்.எஸ்.பி., முதற்கட்ட நடவடிக்கையாக சப்-இன்ஸ்பெக்டர் நரேஷ் பாபுவை தற்காலிகப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in