LATEST NEWS
“அடப்பாவமே.. அசால்ட்டா தூக்கிட்டு ஓடுறான்..!” பட்டப்பகலில் லாரியில் கைவரிசை காட்டிய வாலிபர்.. இணையத்தில் வைரலாகும் பகீர் சிசிடிவி வீடியோ..
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் மைனாத்தேர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டிங்கர்பூர் கிராமத்தில், பட்டப்பகலில் துணிச்சலாக நடைபெற்ற திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் நடமாடிக் கொண்டிருந்த வேளையில், மர்ம நபர் ஒருவர் மிக சாதுரியமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியில் டீசலை திருட்டி சென்றார். இந்த ஒட்டுமொத்த திருட்டுச் சம்பவமும் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
दिनदहाड़े चोरी करता युवक सीसीटीवी कैमरे में कैद
मुरादाबाद। थाना मैनाठेर क्षेत्र के डिंगरपुर गांव में दिनदहाड़े चोरी की घटना सामने आई है। घटना
दौरान एक युवक चोरी करते हुए पास में लगे सीसीटीवी कैमरे में कैद हो गया बताया जा रहा घटना की फुटेज सोशल मीडिया पर भी वायरल हो रही है। pic.twitter.com/76vXjpWjvw— Nitin Gupta (@NitinGupta7f) August 7, 2026
சிசிடிவி காட்சிகளில் அந்த வாலிபர் திருடும் காட்சிகள் பதிவாகிய நிலையில், அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வைரலாகி வருகின்றன. பட்டப்பகலில் நடந்த இந்தத் துணிச்சல் திருட்டு அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், வைரல் சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் அந்த வாலிபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
