LATEST NEWS
“அடக்கொடுமையே…! யூடியூப் பார்த்து இப்படியா செய்வாங்க…? ஆன்லைன் சூதாட்டத்தால் நடந்த பேரதிர்ச்சி..! சிஏ தற்கொலையில் வெளியான பகீர் பின்னணி..!!”
தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டைச் சேர்ந்த சந்தோஷ் என்ற பட்டயக் கணக்காளர், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பந்தய செயலிகளுக்கு அடிமையானதால் பெரும் நிதி இழப்பையும் கடனையும் சந்தித்தார். இதனால் ஏற்பட்ட கடுமையான நிதி மற்றும் மன அழுத்தம் காரணமாக, சித்திப்பேட் புறவழிச் சாலையில் உள்ள ‘ஹரிதா ஹோட்டலில்’ அறை எடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீண்ட நேரமாக அறையிலிருந்து அசைவு எதுவும் இல்லாததால் ஹோட்டல் ஊழியர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் கதவைத் திறந்து பார்த்தபோது சந்தோஷ் இறந்து கிடந்தது தெரியவந்தது.
முதற்கட்ட விசாரணையில், சந்தோஷ் யூடியூப் வீடியோக்களைப் பார்த்துத் தன் தற்கொலைக்குத் திட்டமிட்டது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட ஹீலியம் வாயு உபகரணங்களைக் கொண்டு, மூடிய அறையில் ஹீலியத்தைப் பரவச் செய்து ஆக்சிஜன் அளவைக் குறைத்து மூச்சுத்திணறல் மூலம் அவர் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஹீலியம் நச்சுத்தன்மையற்றது என்றாலும், மூடிய அறையில் அதிகளவில் வெளியிடப்படும்போது அது ஆக்சிஜனை இடம்பெயரச் செய்து உயிருக்கே ஆபத்தான மூச்சுத்திணறலை ஏற்படுத்தக்கூடும். மரணத்திற்கான சரியான காரணம் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே முழுமையாக உறுதி செய்யப்படும்.
சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட தற்கொலைக் கடிதத்தில், சந்தோஷ் தனது பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட நிதி நெருக்கடியே இந்த விபரீத முடிவுக்கு முதன்மையான காரணம் என்பது தெரியவந்துள்ள நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்தவரின் குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
