LATEST NEWS
முதல்வரே இனி நீங்க பேசாதீங்க…! எங்ககிட்ட விடுங்க நாங்க பாத்துக்குறோம்.. உதயநிதிக்கு செக் வைக்க அமைச்சர்கள் வகுத்த அதிரடி வியூகம்.. பரபரக்கும் அரசியல் களம்..!!
பனையூரில் நடைபெற்ற தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் கேள்விகளுக்கு இனி முதலமைச்சர் பதில் சொல்லக்கூடாது என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்களே பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவை முன்னவரான அமைச்சர் செங்கோட்டையனிடம், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவை முன்னவராக உள்ள நீங்கள், அமைச்சர்களே பதில் அளிக்கும் வகையில் புதிய தீர்மானத்தைக் கொண்டு வாருங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியின் கேள்விகளைச் எதிர்கொள்வதில் முன்ஏற்பாடாக இந்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சபை நடவடிக்கைகளில் அமைச்சர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
