LATEST NEWS
“மேயர் ஒத்துழைக்கலனா கமிஷனரை வச்சு வேலையை முடிப்போம்..!” திமுக மேயர்களின் முட்டுக்கட்டைக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கொடுத்த மரண செக்.. சட்ட மன்றத்தில் பரபரப்பு..!!
மேயர்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் கமிஷனர்கள் மூலமாகத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் ஆட்சி மாறிய பிறகும் கூட, சென்னை உள்ளிட்ட 25 மாநகராட்சிகளில் இன்னும் முந்தைய திமுக ஆட்சிக் காலத்து மேயர்களே பதவியில் நீடிப்பதால், அவர்கள் வேண்டுமென்றே புதிய அரசுக்கு முட்டுக்கட்டை போடுவதாக அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். மக்கள் நலனுக்கான குடிநீர் மற்றும் சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அரசு போதிய நிதி வழங்கினாலும், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அதனைச் சரியாகச் செயல்படுத்தாமல் முடக்கி வைப்பதாக அவர் சாடியுள்ளார்.
திமுக உறுப்பினர்களின் காரசாரமான கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், மேயர்கள் முடக்கும் பணிகளைத் துரிதப்படுத்த மாநகராட்சி ஆணையர்களுக்கு (Commissioners) முழு அதிகாரமும் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளதாகத் தெளிவுபடுத்தினார். மேலும், தற்போதைய உள்ளாட்சி நிர்வாகத்தில் நிலவும் குளறுபடிகளுக்கு இன்னும் சில மாதங்களில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 100 விழுக்காடு புதிய பிரதிநிதிகள் பொறுப்பேற்றவுடன் முந்தைய முறைகேடுகள் அனைத்தும் ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு வரும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
