LATEST NEWS
நடிகை ரம்பாவின் சகோதரரை பார்த்துள்ளீர்களா?…. அவரும் பிரபல தயாரிப்பாளர் தான்…. லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!

இந்திய சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ரம்பா. தெலுங்கில் வெளியான ஆ ஒக்கடு அடக்கு என்ற திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். அதனைப் போலவே தமிழ் சினிமாவில் உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இவர் விஜய் மற்றும் சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவர் இலங்கைத் தமிழரான இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து விலகினார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது ரம்பா குழந்தைகள் மற்றும் குடும்பத்தை மட்டும் கவனித்து வருகின்றார். இந்நிலையில் ரம்பாவுக்கு வாசு என்ற சகோதரர் ஒருவர் உள்ளார். தனது சகோதரருடன் இணைந்து ரம்பா 2003 ஆம் ஆண்டு த்ரீ ரோசஸ் என்ற திரைப்படத்தை தயாரித்தார்.
ஆனால் அந்த திரைப்படம் தோல்வி அடைந்ததால் ரம்பா மிகப்பெரிய கடனாளி ஆகி தனது சொத்துக்களை விற்று தான் கடனை அடைத்தார். தற்போது ரம்பாவின் குடும்பத்தை பார்ப்பதற்காக அவரின் சகோதரர் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் ரம்பாவின் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க