LATEST NEWS
“நீட் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்..! கதறி அழுது கெஞ்சியும் இரக்கம் காட்டாத கொடூரர்கள்.. நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ…!!
உத்தரப் பிரதேசத்தின் சித்ரகூட் மாவட்டம், தேவாங்கனா பள்ளத்தாக்குப் பகுதியில் 20 வயது நீட் தேர்வு பெண் மாணவி தனது 17 வயது ஆண் நண்பருடன் வன நடைப்பயணம் மேற்கொண்டபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று நபர்கள் தங்களை வனத்துறை அதிகாரிகள் எனக் கூறிப் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அதற்கு அவர்கள் மறுத்ததால், ஆண் நண்பரின் கை, கால்களைக் கட்டிப்போட்டுத் தாக்கிய அக்கூட்டத்தினர், அந்த இளம் பெண்ணைப் புதருக்குள் இழுத்துச் சென்று கொடூரமாகக் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டுத் தப்பிச் சென்றனர். பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக அவசர உதவி எண் 112-ஐத் தொடர்பு கொண்டு அளித்த தகவலின் பேரில், பஹில்பூர்வா காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.
The Chitrakoot Devangana Valley incident, reported in July 2026, became one of the most widely discussed criminal cases #chitrakoot #gangrape pic.twitter.com/FRxEEBvCir— THE NOVEX OFFICIAL (@THENOVEXOFICIAL) July 27, 2026
இதற்கிடையில் நீட் தேர்வு மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதற்கு முன்பாக, குற்றவாளிகளிடம் அவர் கதறி அழுது கெஞ்சும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் எவ்விதத் தடயமும் இல்லாத இந்த வழக்கில், சித்திரகூட் தாம் டி.ஐ.ஜி. குற்றவாளிகளைப் பிடித்துத் தருபவர்களுக்குத் தலா ரூ.50,000 வெகுமதி அறிவித்தார். சிசிடிவி காட்சிகள் மற்றும் கண்காணிப்புத் தரவுகள் மூலம் 48 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். மட்ஃபா வனப்பகுதியில் தப்பிச் செல்ல முயன்று துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான குற்றவாளி ஜிதேந்திரா (என்ற போலா) காலில் குண்டடிபட்டுப் பிடிபட்டான். தலைமறைவாக இருந்த அவனது கூட்டாளிகளான பிரவீன் மற்றும் விவேக் ஆகிய இருவரும் சிவராம்பூர் சந்திப்பு அருகே கைது செய்யப்பட்டு, மூவரும் தற்போது போலீஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
