LATEST NEWS
FLASH: தர்மேந்திர பிரதான் வீட்டின் முன் போலீஸ் குவிப்பு… பெரும் பரபரப்பு…!!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தின் காரணமாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார். இந்த அதிரடி முடிவைத் தொடர்ந்து, அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் டெல்லியில் உள்ள அவரது வீட்டின் முன்பாக ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணிக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக இந்த விவகாரம் தொடர்பாக மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததும், அப்போது ஏற்பட்ட வன்முறையைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது சிஜேபி கட்சியினர் தங்களது போராட்டங்களை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ள போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சராக மாறியுள்ள தர்மேந்திர பிரதானின் வீட்டிற்குச் செல்லும் வழிகள் கண்காணிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
