காணாமல் போன 26 வயதான மருத்துவர் சில மணிநேரங்களில் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது?…. ஹைதராபாத்தில் மர்மம் நடந்துள்ளது ….. - cinefeeds
Connect with us

TRENDING

காணாமல் போன 26 வயதான மருத்துவர் சில மணிநேரங்களில் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது?…. ஹைதராபாத்தில் மர்மம் நடந்துள்ளது …..

Published

on

தெலங்கானாவின் ஷம்ஷாபாத்-ஐ சேர்ந்தவர் மாதுரி(26). இவர் கால்நடை மருத்துவராக நவாபிப்பெட் பகுதியில் வேலை செய்து வந்துள்ளார். மருத்துவரான இவர் அடிக்கடி ஹைதராபாத்தின் கச்சிபவ்லி-வில் இருக்கும் ஸ்கின் கிளினிற்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று கச்சிபவ்லி-வுக்கு செல்வதற்காக 5 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பிய இவர், ஷம்ஷாபாத் toll plaza-வுக்கு அருகில் தன்னுடைய் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து கச்சிபவ்லி-வுக்கு சென்றுள்ளார்.

அதன் பின் இரு சக்கர வாகனம் நிறுத்திய இடத்திற்கு திரும்பிய மாதுரி, அங்கிருந்து தன்னுடைய சகோதரியான ரம்யாவிற்கு சரியாக உள்ளூர் நேரப்படி 7.22 மணிக்கு அலைப்பேசியில் அழைத்துள்ளார். அப்போது, என்னுடைய இரு சக்கர வாகனத்தின் முன் பக்க சக்கரம் பஞ்சர் ஆகிவிட்டது. ஒருவர் தானாக முன்வந்து உதவுவதாக கூறினார். நான் பஞ்சர் கடைக்கு எடுத்து செல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

இங்கு இருப்பவர்கள் லாரி டிரைவர்கள் போன்று உள்ளனர், அவர்கள் அனைவரும் தன்னையே பார்ப்பது போன்று உள்ளது, பயமாக இருக்கிறது, இரு சக்கர் வாகனம் வரும் வரை என்னிடம் தொடர்ந்து பேசிக் கொண்டே இரு என்று கூறியுள்ளார். அவரது இரு சக்கர வாகனத்தை கொண்டு சென்ற நபர் பஞ்சர் பார்க்காமல், திரும்பியுள்ளார் அவர் கேட்ட போது, பஞ்சர் கடைகள் எல்லாம் மூடப்பட்டுவிட்டது, என்று கூறி வேறொரு இடத்திற்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார்.

அதன் பின் அவரின் சகோதரி சரியாக உள்ளூர் நேரப்படி இரவு 9.44 மணிக்கு அவருக்கு அலைப்பேசியில் அழைத்தபோது, அவரின் phone ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர் உடனடியாக பெற்றோருடன் அங்கு சென்றதாக கூறப்படுகிறது, பல இடங்களில் தேடியுள்ளனர் அவர் கிடைக்கவில்லை. காலை 3 மணிக்கு மேல் அருகில் இருக்கும் காவல்நிலையத்தில், மாதுரி காணாமல் போன விவரம், அலைப்பேசியில் பயத்துடன் பேசிய விவரங்களை புகார் தெரிவித்துள்ளார்.

Advertisement

பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு ஷடங்கர் பொலிசாருக்கு எரிந்த நிலையில் உடல் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்று பார்த்த போது காணமல் போனதாக கூறப்பட்ட மாதுரி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பொலிசார் அந்த phone call-ல் அவர் லாரி டிரைவர்கள் என்று கூறியதால், அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், எந்த ஒரு சரியான ஆதாரமும் கிடைக்கவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in