LATEST NEWS
“நான் பரமசிவனும் அல்ல, பாம்பும் அல்ல” என் பேரை கூட எடப்பாடி மறந்துட்டாரு… பதவி இல்லைனா என்ன..? அ.தி.மு.க-வில் இருந்து விலகிய இசக்கி சுப்பையாவின் குமுறல் பேட்டி…!!
சட்டமன்ற உறுப்பினர் பதவி இல்லை என்றாலும் மக்கள் நலனுக்கான எனது பணிகள் தொடர்ந்து நீடிக்கும் என்று அம்பாசமுத்திரம் முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா உறுதியுடன் தெரிவித்துள்ளார். தனது பதவி விலகல் மற்றும் அரசியல் நகர்வுகள் தொடர்பாகப் பல்வேறு அரசியல் கட்சியினரும் உள்நோக்கத்தோடு பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், “நான் பரமசிவனும் அல்ல, பாம்பும் அல்ல; நான் ஒரு சாதாரண மனிதன்” என்று இசக்கி சுப்பையா ஆவேசமாகப் பேசியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேசிய அவர், அ.தி.மு.க-வில் இத்தனை ஆண்டு காலம் விசுவாசமாகப் பணியாற்றிய தனது பெயரைக் கூட இ.பி.எஸ் மறந்துவிட்டார் என வேதனை தெரிவித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமி கட்சியில் தன்னாட்சியோடு (தன்னிச்சையாக) செயல்பட்டு வருவதாகவும், கட்சியின் மூத்த நிர்வாகிகளின் நிலைப்பாடுகளைக் கேட்டறியாத சூழல் நிலவியதாலேயே தாம் அ.தி.மு.க-விலிருந்து விலக நேரிட்டது என்றும் இசக்கி சுப்பையா தனது பிரத்தியேகப் பேட்டியில் அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.
