LATEST NEWS
“அடிப்படை அறிவு இருக்கா..? முதலீடு எப்படி நடக்குதுன்னு தெரியுமா..?” வதந்திகளுக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனா கொடுத்த தரமான அதிரடி பதிலடி..!!
தமிழகத்திலிருந்து அனைத்து முதலீடுகளும் ஆந்திராவுக்குச் சென்றுவிடுவதாகக் கூறப்படும் செய்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகள் என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனா மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார். இது போன்ற தவறான தகவல்களைப் பரப்புபவர்களுக்குப் பொருளாதார முதலீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்த அடிப்படை அறிவு இருக்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு மாநிலத்திற்கு வரும் முதலீடுகள் என்பது ஒரு பட்டனைத் தட்டிய உடனே மற்றொரு மாநிலத்திற்கு எளிதாக மாறிவிடாது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், வெறும் ஐந்து நாட்களில் அனைத்து முதலீடுகளும் ஆந்திராவுக்குப் போய்விட்டது என்று கூறுவது முற்றிலும் நகைப்புக்குரியது என்றார். முதலீடுகள் ஈர்க்கப்படும் நடைமுறைகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள ஒப்பந்தங்கள் குறித்துத் தெரியாமல் இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுவதாக அவர் விளக்கினார்.
மேலும், தமிழகத்திற்கு வரும் தொழில் முதலீடுகள் பாதுகாப்பாகவும், திட்டமிட்டபடியும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்றும் அமைச்சர் கீர்த்தனா பேரவையில் உறுதிபடத் தெரிவித்தார். அரசியல் காரணங்களுக்காகத் தவறான பரப்புரைகளை மேற்கொள்வதை விட்டுவிட்டு, உண்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் எதிர்க்கட்சிகளுக்கு அறிவுறுத்தினார்.
