TRENDING
மாணவியிடம் கேட்க கூடாத கேள்வி.? தனியறையில் பாடம் எடுத்த ஆசிரியர்..! பிறகு நடந்த படுபயங்கர சம்பவம்.?
கன்னியாகுமாரி மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் தனது மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததால் பொதுமக்கள் அவரை அடித்து இழுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடியில் சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் தற்காலிய ஆசிரியரான சுரேஷ் என்பவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியிடம் அதே பள்ளியில் தற்காலிகமாக ஆசிரியர் பணிக்கு சேர்ந்தவர் சுரேஷ் அவர் அந்த மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்வுள்ளார், அதனை அந்த மாணவி தனது பெற்றோர்களிடம் தெரிவித்து உள்ளார் .அதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் அவரது ஊர் மக்களிடம் இதனை தெரிவித்து .
அனைவரும் அந்த பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியர் சுரேஷை அடித்து உதைத்து தெருவில் இழுத்து கொண்டு வந்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரும் அவரை பைக்கில் அமரவைத்து காவல் நிலையத்திற்கு சென்று உள்ளார். இன்னும் அவர்மீது எந்த ஒரு புகாரும் பதிவு செய்யவில்லை. ஆனால் அவரிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.