Uncategorized
காதல் விவகாரத்தில்… “காதலனை கடத்திச் சென்று”… நூதன முறையில் கொலை…! ‘உடலை எரித்த கும்பலை போலீசார் வலை’… வீசித் தேடி வருகிறார்கள்.?
புதுவையை அடுத்த தமிழக பகுதியான பெரிய கோட்டக்குப்பத்தை சேர்ந்த சங்கர். இவருடைய மகன் ராகவன் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். ராகவன் நேற்று மாலை கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு பகுதியில் அவருடைய நண்பர்களான புதுவை முத்தியால்பேட்டை சிவனேசன், சஞ்சய் ஆகியோருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் சிவனேசன், சஞ்சய்யை கொடூரமாக அடித்து போட்டுவிட்டு ராகவனை கடத்திச் சென்றனர்.
பின்னர் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத கோட்டக்குப்பம் அய்யனார் கோவில் பின்புறம் வைத்து ராகவனை பயங்கர ஆயுதங்களால் துடிக்க துடிக்க வெட்டி கொலை செய்தனர். அதன் பின் ஆத்திரம் தீராத அவர்கள் உடலில் பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டு சென்றனர்.
ராகவனை கடத்தியது குறித்து அவருடன் இருந்த சிவனேசன், சஞ்சய் ஆகியோர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை பார்வையிட்டனர்.
அப்போது ராகவன் உடல் எரிந்தும் எரியாமலும் கிடந்தது. உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதையடுத்து கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது கொலையாகளை தேடி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராகவன் அவர் வசித்து வந்த அதே பகுதியில் ஒரு பெண்ணை காதலித்ததால் இவர்களின் காதல் விவகாரம் தெரிந்து பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த ராகவன் ஐதராபாத்தில் இருந்து நேற்று முன்தினம் கோட்டக் குப்பம் வந்துள்ளார். இந்தநிலையில் அவரை மர்ம கும்பல் கடத்திச் சென்று கொலை செய்துள்ளது.