பிஞ்சி குழந்தையை நாசமாகிய சமையல்காரன்- தெலுங்கானா பரபரப்பு - cinefeeds
Connect with us

TRENDING

பிஞ்சி குழந்தையை நாசமாகிய சமையல்காரன்- தெலுங்கானா பரபரப்பு

Published

on

தற்போது தான் 12 ஆண்டிற்கு பிறகு நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை கிடைத்துள்ளது இந்த பயம் அறியாமல்.
தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் ஒரு தனியார் கல்லூரியில் சமையல்காரரால் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்திலிருந்து வந்த ஒரு குடும்பம் ஒரு மாதத்திற்கு முன்பு ஹைதராபாத்தில் ஒரு கல்லூரியின் பணியாளர்கள் குடியிருப்பில் குடியேறியது. அந்த குடும்பத்தில் நாலு வயது சிறுமியும் இருந்தாள். பார்க்க துறு துறு வென்று அழகாக இருப்பாள்.

Advertisement

மார்ச் 10ம் தேதி அந்த சிறுமி தன்னுடைய தாயாரிடம் வெளியே விளையாடிவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றாள். ஆனால் நீண்ட நேரமாக சிறுமி வீட்டுக்கு வராததால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அக்கம்பக்கம் முழுவதும் தேடினார்கள்.

அப்போது ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் சிறுமி ரத்தப்போக்குடன் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிறகு அந்த சிறுமியை ஒரு தனியார் கல்லூரியின் சமையல் காண்ட்ராக்டர் பாலியல் பலத்காரம் செய்து வீசிவிட்டு சென்ற விஷயம் அந்த சிறுமி மூலம் தெரிந்து கொண்ட அவர்கள் இது பற்றி அவரிடம் கேட்டனர்.

Advertisement

உடனே கல்லூரியை சேர்ந்த சில அதிகாரிகள் அவரிடம் தொடர்பு கொண்டு கொஞ்சம் பணத்தை கொடுத்து இதுபற்றி வெளியே சொல்லாமல் ஊரை விட்டு போகும்படி கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசில் புகார் தந்தனர். போலீசார் விசாரித்து அந்த நபரை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகினர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மட்டும் இல்லாமல் கல்லூரி மாணவ மாணவிகளேடையே பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் பொதுமக்களும், நெட்டிசன்களும் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கண்டிப்பாக நீதிமன்றம் வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in