LATEST NEWS
போலீசை பாராட்டி பொதுமக்களை வசை பாடிய மாதவன் – விவரம் உள்ளே
கொரானா வைரஸ் சீனாவின் உஹானில் தொடங்கி தற்போது அனைத்து உலக மக்களையும் அச்சுறுத்தியும் வருகிறது.இதன் தாக்கம் நம்ம இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதன் அசுர தாக்குதல் நடத்தியும் உள்ளது, என்பது தான் உண்மை.
இதன் தாக்கதை அறிந்த நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மத்திய அரசு இந்தியாவை 21 நாட்களுக்கு முடக்கி 144 தடை உத்தரவு விதித்துள்ளது.அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்றவை கிடைக்காது. என அறிவித்து உள்ளது. இதுவும் ஒருவிதத்தில் நல்ல அறிவிப்பு தான்.ஆனால் தமிழகத்தில் சிலர் சென்று கொண்டிருந்ததை பார்த்த போலீஸ்காரர் ஒருவர் அவர்களிடம் கண்ணீருடன் வீட்டிலேயே இருக்குமாறு வேண்டுகோள் வைத்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் நெகிழ வைத்தது. நடிகர் மாதவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழகத்தின் மீது மதிப்பு கூடுகிறது எனவும் ஏன் இப்படி வெளியே சுற்றுகிறார்கள் எனவும் அந்த இளைஞர்களை வசை பாடியுள்ளார்.
Tamil Nadu cops risking everything to urge and literally beg some idiot brothers of ours to stay home. I feel so much love,respect & gratitude for these policemen. Salutations Tamil Nadu Police.We owe you.I am so moved . #tamilnadupolice #tamilnadugovernment @narendramodi https://t.co/6TS89UeTPU
— Ranganathan Madhavan (@ActorMadhavan) March 25, 2020