Uncategorized
நண்பணின் மனைவியுடன் தகாத உறவு… தீடிர் என்று வீற்றிக்குள் புகுந்த காதலன் பின்னர் நடந்த கொடூரம்”.. சென்னை பகீர் தகவல்…?
நண்பனை பார்க்க செல்லும் சாக்கில் அவரது மனைவியோடு உல்லாசம் அனுபவித்து வந்த ஜான்சன், கள்ளக்காதலி அபிதா போனை எடுக்காததால் வெறித்தனமாக தாக்க, குறுக்கே வந்த கணவன் மீன்பாடி மாரி கொலவெறியில் பண்ண சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி கல்யாணபுரத்தை சேர்ந்த மாரிமுத்து மீன்பாடி வண்டி ஓட்டி வருகிறார். இவரது மனைவி அபிதா, மாரிமுத்துவின் நண்பர் புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன். இந்நிலையில், ஜான்சன் அடிக்கடி நண்பன் மீன்பாடி மாரிமுத்துவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார், அபிதாவின் அழகில் மயங்கிய ஜான்க்கு அவர் மீது ஒரு கண், நாளுக்கு நாள் நைசாக பேசி மயக்கியுள்ளார். நாளடைவில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கள்ளக்காதலாக மாறி இருவரும் தனிமையில் சந்தித்துள்ளனர்.. இதனை தொடர்ந்து நண்பன் மீன்பாடி மாரிமுத்துவை பார்க்க செல்லும் சாக்கில் அவரது மனைவி அபிதாவோடு உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இந்த மேட்டரை மாரிமுத்துவின் பெற்றோர் கண்டித்தனர்.
இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இந்த சமயத்தில் நேற்று மதியம் ஜான்சன், செல்போனில் கள்ளக்காதலி அபிதாவை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அபி போனை எடுக்காததால் டென்ஷானான ஜான்சன் சரக்கு போதையில் மீன்பாடி மாரிமுத்துவின் வீட்டிற்கு வந்து அபியிடம், ஏன் எனது போனை எடுக்கவில்லை என்று கூறி தகராறு செய்துள்ளார். பின்னர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அபிதாவை வெட்டி அவர் அலறித்துடித்தபடி கீழே விழுந்துள்ளார்.
அபிதாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த கணவன் மீன்பாடி மாரிமுத்து ஓடிவந்து ஜான்சனிடமிருந்த அரிவாளை பிடுங்கி அவரை சரமாரியாக வெட்டினார். இதில் ஜான்சனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த ஏரியா மக்கள் அபி மற்றும் ஜான்சனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.