LATEST NEWS
ரேஷன் கார்டுதாரர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..! பொங்கலுக்கு ஜரிகை சேலையுடன் ரூ.3,000 பரிசுப் பணம்..? – பொதுமக்களை குஷிப்படுத்திய தவெக அரசின் அதிரடி பிளான்..!!
2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு 4 முழ வேட்டி மற்றும் ஜரிகையுடன் கூடிய விலையில்லா சேலை வழங்கப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி சட்டப்பேரவையில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தவெக அரசு, பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிக்கான ஆயத்த வேலைகளை மிக விரைவாகவே தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இம்முறை ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசுப் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் மக்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளன. பரிசுத் தொகை குறித்து தவெக அரசு மிக விரைவில் ஒரு நல்ல முடிவை எடுத்து அறிவிக்கும் என்று பொதுமக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
