LATEST NEWS
“எப்படி அனுமதிச்சீங்க..?” அரசுப் பள்ளி ஆசிரியர்கள் விவகாரத்தில் சீமான் ஆக்ரோஷம்.. தவெக அரசுக்கு விடுத்த பகிரங்க எச்சரிக்கை..!!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு வடமாநில ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்குத் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான ஆசிரியர்கள் ஏராளமானோர் இருக்கும்போது, வடமாநிலங்களைச் சேர்ந்த ஆசிரியர்களைக் கொண்டு வந்து நியமிக்க அரசு எவ்வாறு அனுமதித்தது என்று அவர் ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். வெளிமாநிலத்தவர்களின் ஆதிக்கத்தைத் தமிழகக் கல்வித்துறைக்குள் அனுமதிப்பது உள்ளூர் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“தேர்தல் நேரத்தில் மாநில உரிமைகளைக் காப்போம் என முழக்கமிட்டு ஆட்சியைப் பிடித்த தவெக அரசு, தற்போதைய கல்வி நிர்வாகத்தில் காட்டும் இந்த அலட்சியம்தான் மாநில உரிமைகளைக் காக்கும் முறையா?” என்று சீமான் சாடியுள்ளார். தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடும், தமிழ் மண்ணின் உரிமைகளோடும் விளையாடும் இத்தகைய கொடுமைகள் அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து நீடித்தால், நாம் தமிழர் கட்சி சார்பில் மிக விரைவில் மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடமாநில ஆசிரியர்களின் நியமனத்திற்கு எதிரான சீமானின் இந்த அதிரடி அறிக்கை, தற்போது தமிழக அரசியல் மற்றும் கல்வி வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது
