LATEST NEWS
“கிரிக்கெட்டில் சிறந்தவர், ஆனால் படுக்கையறையில் வீக்…” அவருக்கு யாராவது சொல்லிக்கொடுங்க.. ரோஹித் சர்மா குறித்து சோபியா ஹயாத் வெளியிட்ட அதிர்ச்சி கருத்து..!!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா மற்றும் பிரிட்டிஷ்-இந்திய மாடல் சோபியா ஹயாத் ஆகியோருக்கு இடையே கடந்த 2012ஆம் ஆண்டு காலகட்டத்தில் காதல் இருந்ததாகப் பரவலாகக் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், அண்மையில் இணையத்தில் வெளியான பாட்காஸ்ட் நேர்காணல் ஒன்றில் சோபியா ஹயாத், ரோஹித் சர்மாவுடனான தனது பழைய நெருக்கமான உறவு குறித்துப் பேசியுள்ள அதிர்ச்சிகரமான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. ரோஹித் சர்மா உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக இருக்கலாம், ஆனால் படுக்கையறை விஷயத்தில் அவர் சிறந்தவர் கிடையாது என்றும், அது அவருக்கு முதல் முறையாக இருந்திருக்கலாம் என்றும் சோபியா விமர்சித்துள்ளார். மேலும், படுக்கையறையில் ஆண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்கு யாராவது கற்றுக் கொடுப்பது அவசியம் என்றும் அவர் தனது தனிப்பட்ட கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
சோபியா ஹயாத்தின் இந்த எல்லை மீறிய தனிப்பட்ட விமர்சனங்கள், எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. பல வருடங்களுக்கு முன்பு ரோஹித் சர்மா தன்னை வெறும் “ரசிகை” என்று ஊடகங்களில் குறிப்பிட்டதால் அவருடனான உறவை முறித்துக் கொண்டு, சமூக வலைதளங்களிலும் அவரைத் தொடர்வதைத் தவிர்த்ததாக சோபியா ஏற்கனவே கூறியிருந்தார். தற்போது ரோஹித் சர்மாவின் திருமண வாழ்க்கைக்குப் பிறகு, அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சோபியா இவ்வாறு பொதுவெளியில் பேசியுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ரோஹித் சர்மா தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கப்படவில்லை.
