இன்று சட்டசபையில் நடந்தது என்ன…? ஏன் தமிமுன் அன்சாரி கைது செய்யப்பட்டார்…? சட்டசபை வளாகத்தில் பரபரப்பு நீடித்த காரணம் என்ன..? - cinefeeds
Connect with us

Uncategorized

இன்று சட்டசபையில் நடந்தது என்ன…? ஏன் தமிமுன் அன்சாரி கைது செய்யப்பட்டார்…? சட்டசபை வளாகத்தில் பரபரப்பு நீடித்த காரணம் என்ன..?

Published

on

நாகை மாவட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறை, வேதாரண்யம், நாகை, பூம்புகார், கீழ்வேளூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இதில் வேதாரண்யம் தொகுதியில் வெற்றிபெற்ற ஓ.எஸ்.மணியன் அமைச்சராக உள்ளார். நாகை தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற தமிமுன் அன்சாரி உறுப்பினராக உள்ளார்.

Advertisement

சட்டசபை வளாகத்தில் தர்ணா போராட்டம் செய்த தமிமுன் அன்சாரி கைது செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சட்டமன்றத்தில் என்பிஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரி சட்டசபை வளாகத்தில் அன்சாரி தர்ணா போராட்டம் நடத்தினார். யாருக்கோ பயந்துகொண்டு வாக்கு வங்கியை இழந்து கொண்டிருக்கிறது அதிமுக என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement

சிஏஏ என்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிமுன் அன்சாரி எம்எல்ஏ ஏற்கனவே காத்திருப்பு போராட்டம் நடத்திய நிலையில் தற்போது என்.பி.ஆருக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in