LATEST NEWS
“கடவுள் இருக்கான் குமாரு..” 16 வருடங்களுக்கு பிறகு கிடைத்த அண்ணன்.. ஆனா நடுரோட்டில் சகோதரனின் கோலத்தை பார்த்து திகைத்து நின்ற தங்கை.. நெட்டிசன்களைகதறி அழவைத்த சம்பவம்..!!
ரக்ஷா பந்தன் திருநாளில் தனது உடன்பிறவா சகோதரனுக்கு ராக்கி கயிறு கட்டுவதற்காகச் சென்ற பெண்ணிற்கு, சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன தனது சொந்த அண்ணன் நடுரோட்டில் பிச்சைக்காரராகக் கிடைத்த நெஞ்சை உருக்கும் மாபெரும் பாசப் போராட்டம் தற்பொழுது ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையும் கண்ணீரில் நனைய வைத்துள்ளது. ரக்ஷா பந்தன் பண்டிகை அன்று அந்தப் பெண் அண்ணனுக்கு ராக்கி கட்டுவதற்காகச் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, தற்செயலாக அங்கு அமர்ந்திருந்த ஒரு ஏழைப் பிச்சைக்காரரைப் பார்த்துக் திடுக்கிட்டு அப்படியே உறைந்து நின்றுள்ளார். சாலையோரம் பரட்டைத் தலையுடனும், கிழிந்த ஆடைகளுடனும் அமர்ந்திருந்த அந்த நபர், வேறு யாருமல்ல. கடந்த 16 வருடங்களுக்கு முன்பு தங்களது குடும்பத்தை விட்டுப் பிரிந்து, எங்குத் தேடியும் கிடைக்காமல் போன அவளது அசைக்க முடியாத அன்புச் சொந்த அண்ணன் என்பதை அவர் அசாத்திய வேகத்தில் அடையாளம் கண்டுள்ளார்.
தனது கண்களையே நம்ப முடியாத அந்தப் பாசமுள்ள தங்கை, ஓடிச்சென்று தனது அண்ணனின் கைகளைக் கட்டியணைத்துத் தனது நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு, “இறைவா உனக்குக் கோடி கோடி நன்றிகள்.. 16 வருடங்களுக்குப் பிறகு என் அண்ணனை மீண்டும் என்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிட்டாயே!” என்று கூறி நடுரோட்டிலேயே கதறி அழுதுள்ளார். பல வருடங்களாக அண்ணன் இல்லாத ஏக்கத்தில் தவித்த அந்தத் தங்கைக்கு, ரக்ஷா பந்தன் நாளில் தன் சொந்த அண்ணனே பிச்சைக்காரர் ரூபத்தில் கிடைத்த இந்த நெகிழ்ச்சியான தருணத்தைக் கண்ட அங்கிருந்த பொதுமக்களும் கண்ணீர் சிந்தியுள்ளனர். அதன் பிறகு, அந்தப் பெண் தனது அன்பு அண்ணனைத் தன்னுடனேயே தனது வீட்டிற்குப் பத்திரமாக அழைத்துச் சென்றுள்ளார். பாசப் பிணைப்பின் உன்னதத்தையும், இறைவனின் அற்புதக் கணங்களையும் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டும் இந்த ரியல் லைஃப் நெகிழ்ச்சிச் சம்பவம் தற்பொழுது இணையத்தில் அசுர வேகத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
