LATEST NEWS
“சுனாமியே வந்தாலும் கல்யாணம் பண்ணுவேன்…” இயற்கைக்கே சவால் விட்ட காதல் ஜோடி.. இடுப்பு அளவு தண்ணீரில் மூழ்கிய சர்ச்… பிடிவாதமாக வெள்ளத்தில் தாலி கட்டிய மணமகன்.. வைரல் வீடியோ..!!
பிலிப்பைன்ஸில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் கடுமையான பருவமழை மற்றும் இயற்கை சீற்றங்களால் நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அங்குள்ள ஒரு தம்பதி வெள்ளத்தை பொருட்படுத்தாமல் தங்கள் திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர். மணமகள் லியான் லீஸா கலாங், வெள்ளை நிற ஆடை அணிந்து, கையில் பூங்கொத்துடன் சேறும் சகதியுமான இடுப்பளவு வெள்ளநீரில் நடந்து வந்து மணமகன் கில்பர்ட் சிக்கோவை அடைந்தார். தலைநகர் மணிலாவின் வடக்கே அமைந்துள்ள ஹாகோனோய் நகரில் உள்ள ‘செயின்ட் ஜான் தி பாப்டிஸ்ட்’ தேவாலயத்தில் இவர்களது திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த ஒரு மாதமாக இந்தத் தேவாலயம் பகுதியளவு நீரில் மூழ்கியிருந்ததால், வெள்ளத்தைக் கருத்தில் கொண்டு திருமணத்தை ஒத்திவைக்குமாறு தேவாலய நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆனால், தம்பதியினர் தங்களது முடிவில் உறுதியாக இருந்ததால், அவர்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்களுடன் திருமணத்தை நடத்தினர். மணமகன் கில்பர்ட் கூறுகையில், உடைகள் நனைந்துவிடும் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் முழு மனதுடன் சடங்குகளைச் செய்ததாகவும், தேவாலயத்தின் வாசல் வரை ஆடைகள் நனையாமல் இருக்க உயரமான ரிக்ஷாவில் வந்திறங்கியதாகவும் கூறினார். மணமகளின் ஆடை தண்ணீரில் சிக்காமல் இருக்க அதன் கீழ் பகுதி சற்று வெட்டப்பட்டு மாற்றியமைக்கப்பட்டது.
மத்திய கிழக்கில் பணிபுரியும் மணமகன் கில்பர்ட், முதலில் இந்தத் திருமணத்தை டிசம்பர் மாதத்தில் நடத்த திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்தார். ஆனால் சூழ்நிலைகள் மாறியதால் தற்போதே நடத்த முடிவானது. திருமண புகைப்படக் கலைஞர் மிகோ ரே அல்போன்சோ கூறுகையில், “இருவரும் ஒருவர் மீது ஒருவர் அளவுகடந்த அன்பு வைத்துள்ளனர், அவர்களின் இந்த இணைப்பைத் தடுக்க யாராலும் முடியாது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இதற்கிடையில், பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட இந்த அசாதாரண கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
