LATEST NEWS
“ஜன்னல் வழியா போனது யாரு.?” மண்டையில் ரத்தம் வருது… மகளுக்கு பர்த்டே சர்ப்ரைஸ் கொடுக்க வந்த பெற்றோர்… நீண்ட நேரம் கதவை திறக்காத மகள்… பக்கத்துவீட்டுக்காரர் கொடுத்த ஷாக் நியூஸ்..!!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸைச் சேர்ந்த சிம்ரத் கவுர் என்பவரது 23 வயது மகள், லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் (LPU) படித்து வருகிறார். இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு ஆச்சரியம் (Surprise) அளிக்க விரும்பிய அவரது பெற்றோரும் சகோதரரும், முன்னறிவிப்பு ஏதுமின்றி அவர் தங்கியிருந்த தனி அறைக்கு நேரில் சென்றனர். மகளுக்குத் தெரியாமல் கேக் வாங்கிக்கொண்டு அவரது அறைக் கதவைத் தட்டியபோது, உள்ளே இருந்து எந்தப் பதிலும் வராமல் சுமார் 15 நிமிடங்கள் கதவு பூட்டியே இருந்தது.
நீண்ட நேரக் காத்திருப்பிற்குப் பிறகு கதவு திறக்கப்பட்டபோது, அந்த மகள் மிகவும் அமைதியான குரலில், “நான் உள்ளே படித்துக் கொண்டிருந்தேன்” என்று சாதாரணமாகக் கூறியுள்ளார். ஆனால், அதே வினாடியில் அங்கு பதற்றத்துடன் ஓடிவந்த பக்கத்து வீட்டு நபர், “உங்கள் அறையின் பின் பக்க ஜன்னல் வழியாக ஒரு வாலிபர் கீழே குதித்துவிட்டார்; அவரது தலையில் இருந்து ரத்தம் கொட்டுகிறது!” என்று அதிர்ச்சித் தகவலைக் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடையாத அந்தப் பெண், “எனக்கு எதுவும் தெரியாது, நான் என் அறையில் படித்துக் கொண்டுதான் இருந்தேன்” என்று மழுப்பலாகப் பதிலளித்துள்ளார்.
கையில் பிறந்தநாள் கேக்குடன் நின்றிருந்த பெற்றோரின் இதயமே இந்த நாடகத்தைக் கண்டு நொறுங்கிப் போனது. இன்றைய காலகட்டத்தில் கல்வி பயிலச் செல்லும் பல இடங்களில் இதுபோன்ற கலாச்சாரச் சீரழிவுகளும், ஏமாற்று வேலைகளும் பரவலாக நடந்து வருவதாக இந்தச் சம்பவத்தைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருபவர்கள் ஆதங்கப்படுகின்றனர். இதனை நம்பாதவர்கள், தங்கள் பிள்ளைகளின் அறைகளுக்கு இதுபோன்று திடீரெனச் சென்று சோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம் என்றும் அந்தப் பதிவில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
