CRIME
“ஐயோ கடவுளே..! “ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்..” இரயில் தண்டவாளத்தில் நின்ற 19 வயதுப் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. கண்ணீர் விட்டு கதறும் நண்பர்கள்..!!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ எடுக்கும் மோகத்தால், 19 வயது இளம் பெண் ஒருவர் ஓடும் இரயிலில் மோதி தனது இரண்டு கைகளையும் முற்றிலும் பறிகொடுத்த பதைபதைக்கும் விபரீதச் சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் காட்வா மாவட்டத்தில் உள்ள நகர்-உண்டாரி இரயில்வே பகுதிக்கு அருகே, பூர்ணிமா என்ற 19 வயது இளம் பெண் தண்டவாளத்தின் மீது நின்று கொண்டு ரீல்ஸ் வீடியோ எடுத்து அசத்த முயன்றுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அந்தத் தண்டவாளத்தில் அசுர வேகத்தில் வந்த ராஞ்சி – சோபன் எக்ஸ்பிரஸ் இரயில், பூர்ணிமா மீது பயங்கரமாக மோதித் தூக்கி வீசியுள்ளது.
இந்தக் கொடூரமான இரயில் விபத்தில் சிக்கிய பூர்ணிமாவின் இரண்டு கைகளும் அடியோடு துண்டிக்கப்பட்டுப் போனதுடன், அவரது உடலின் இதர பாகங்களிலும் அசைக்க முடியாத அளவிற்குப் பலத்த இரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. விபத்து நடந்த உடனே அங்கிருந்த அவரது நண்பர்கள் அலறியடித்து ஓடிவந்து, அவரை மீட்டு அருகில் உள்ள அவசர மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பூர்ணிமாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரீல்ஸ் மோகத்தால் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை நரகமாக மாறியுள்ள இந்த சம்பவம் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு ஒரு பவர்ஃபுல் எச்சரிக்கையாக மாறியுள்ளது.
