LATEST NEWS
“எமனையே ஏமாற்றிய பெண்..” 10-வது மாடியில் இருந்து விழுந்த அடுத்த நொடியே நடந்த அதிசயத்தை நீங்களே பாருங்க.. நெட்டிசன்களை அலறவைத்த வீடியோ..!!
மும்பை பாண்டுப் பகுதியில் உள்ள சன்ஷைன் எஸ்ஆர்ஏ அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் ஒருவர், கீழே இருந்த ஒரு பெரிய மரத்தின் கிளைகளில் சிக்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து, உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மரத்தில் சிக்கியிருந்த அந்தப் பெண்ணைப் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மீட்பு பணி வீடியோ வைரலாகி வருகிறது.
https://twitter.com/VishooSingh/status/2092545521869299883/video/1
அவர் 10-வது மாடியில் இருந்து எவ்வாறு கீழே விழுந்தார் என்பது குறித்தும், தற்கொலை முயற்சியா அல்லது விபத்தா என்ற கோணத்திலும் உள்ளூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது தற்போதைய உடல்நிலை குறித்து போலீசார் தொடர்ந்து கண்காணித்து விசாரித்து வருகின்றனர்.
