LATEST NEWS
இன்னையோட முடிஞ்சிடும்னு நினைச்சீங்களா? கேஸ் eKYC பண்ண இன்னும் 8 நாள் டைம் கொடுத்தாச்சு..! மிஸ் பண்ணிடாதீங்க… சீக்கிரம் பண்ணிடுங்க..!!
கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்வதற்கான eKYC ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று இரவுடன் இதற்கான காலக்கெடு நிறைவடையவிருந்த நிலையில், வாடிக்கையாளர்களின் வசதிக்காக மேலும் 8 நாள்கள் அவகாசம் வழங்கி இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது eKYC ஆவணங்களை உடனடியாக சமர்ப்பித்துவிடுங்கள். தவறினால் உங்களால் கேஸ் உருளை புக்கிங் செய்ய முடியாமல் போவதுடன், அரசு வழங்கும் மானியத் தொகையும் உங்களுக்குக் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.
