LATEST NEWS
“எப்பா காது வலிக்குதுடா சாமி” CM சார்.. உங்க ரத்த அழுத்தத்தை கொஞ்சம் பாத்துக்கோங்க.. திவ்யா சத்யராஜ் போட்ட பரபரப்பு பதிவு…!!
திமுக நிர்வாகியும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், உண்மையைப் பேசுபவர்கள் எப்போதும் இயல்பாகவே பேசுவார்கள் என்றும் அவர்களுக்கு ‘மடியில் கனமில்லை’ என்றும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பொய்யை மூலதனமாகக் கொண்டு பேசுபவர்களே தங்களது பொய்யை மறைப்பதற்காகக் கத்திப் பேசுவதாக அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், “Take care of your blood pressure, CM sir. காது வலிக்குதுடா சாமி” எனக் குறிப்பிட்ட அவர், தீவிரமான பேச்சுகளால் தேவையில்லாமல் பதற்றமடைவதைத் தவிர்க்குமாறு முதலமைச்சரைக் கிண்டலாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் களத்தில் தலைவர்களுக்கிடையேயான குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் அதிகரித்து வரும் சூழலில், திவ்யா சத்யராஜின் இந்த பதிவு தற்போதைய அரசியல் சூழலில் பெரும் கவனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
