LATEST NEWS
“என் கையிலும், காலிலும் அடிச்சாங்க!” தூத்துக்குடி லாக்-அப் மரணத்தில் இளைஞரின் பகீர் மரண வாக்குமூல வீடியோ.. பெரும் பரபரப்பு..!!
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட 26 வயதான இளைஞர் அருணாச்சலம், போலீசாரின் கொடூர தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, போலீசார் தன்னை தலையிலும் காலிலும் மிகக் கொடூரமாக தாக்கியதாக அருணாச்சலம் மரண வாக்குமூலம் அளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், இளைஞரின் மரணத்திற்கு போலீசாரின் அத்துமீறிய தாக்குதலே முக்கிய காரணம் என்று அவரது குடும்பத்தினரும் பொதுமக்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவத்திற்கு நீதி கேட்டு, உயிரிழந்த அருணாச்சலத்தின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நீதி மற்றும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த லாக்-அப் மரண விவகாரம் தற்பொழுது பெரும் மனித உரிமை மீறல் சர்ச்சையாக வெடித்துள்ளதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
