LATEST NEWS
“அந்த ஃபைல்கள் என் டேபிளில் இருக்கு.. ஓபன் செய்ய வச்சிடாதீங்க..!” முதல்வர் விஜய் யாரை மிரட்டுகிறார்..? திணறும் அரசியல் களம்..!!
ஊழல் புகார்கள் மற்றும் ஃபைல்கள் தொடர்பான முதல்வர் விஜய்யின் சமீபத்திய பேச்சு அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தையும் கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் இதுகுறித்து அவர் பேசுகையில், மூன்று துறை தொடர்பான ஊழல் ஃபைல்கள் தமக்குச் சொந்தமான மேசையில் இருப்பதாகவும், அவற்றுக்கான அத்தனை ஆதாரங்களும் தங்களிடம் உள்ளதாகவும் குறிப்பிட்டு, எதிர்க்கட்சிகளை எச்சரிக்கும் வகையில் அவற்றை ஓபன் செய்ய வைத்துவிடாதீர்கள் என்று எச்சரித்தார்.
இந்த விவகாரம் குறித்து பொதுமக்களும் பல்வேறு அரசியல் தலைவர்களும், உரிய தகுந்த ஆதாரங்கள் கைவசம் இருந்தும் உடனடியாகச் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்காமல், ஊழல் கோப்புகளை எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கும் அரசியல் அழுத்தங்களைக் கொடுப்பதற்கும் மட்டுமே பயன்படுத்துவது முறையா என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், முறைகேடுகள் மீது வெளிப்படையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமே தவிர, அவற்றை வைத்து அரசியல் செய்யப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் விமர்சனங்கள் வலுத்து வருகின்றன.
