LATEST NEWS
“இனி எந்த அரசும் இதைச் செய்ய முடியாது…!” நகைக்கடன் விவகாரத்தில் திமுக – தவெக அதிரடி மோதல்.. சமூக வலைதளங்களில் அனல் பறக்கும் வைரல் வாதங்கள்..!!
பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பை முதல்வர் விஜய் படிப்படியாக உயர்த்தி வருவதாகத் தவெகவினர் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகத் டிரெண்ட் செய்து வரும் நிலையில், இதற்குப் பதிலடியாக திமுகவினரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். வரலாற்றிலேயே இதுவரை யாரும் செய்யாத சாதனையாக நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பைத் தங்களது ஆட்சி காலத்தில் வெளியிட்டது தாங்கள் மட்டுமே என்று அவர்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர். தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தற்போதைய நிலவரப்படி, இனி எந்த அரசும் இத்தகைய அதிரடியான நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிடுவது சாத்தியமில்லை என்றும் திமுக தரப்பில் வாதிடப்படுகிறது.
கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் பெற்ற 5 சவரன் வரையிலான நகைக்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைப் பிறப்பித்திருந்தார் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
