LATEST NEWS
ஐயோ கடவுளே.. பாதுகாப்பான பள்ளிக்கூடம் எமலோகமான சோகம்… சுவர் இடிந்து விழுந்து 14 வயது மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. கதறி துடிக்கும் தாயின் கண்ணீர் வீடியோ..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் மன்யம் மாவட்டம் சாலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த 14 வயது மாணவன் அருண் தேஜ், பள்ளிச் சுவர் திடீரென இடிந்து விழுந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தான். ஆபத்தான பகுதியிலோ அல்லது வேறு எங்குமோ செல்லாமல், பாதுகாப்பாக இருக்க வேண்டிய பள்ளிக் கூடத்திற்குச் சென்ற தன் மகன், மோசமான உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தின் அலட்சியத்தால் பலியானதை எண்ணி அவனது தாய் கதறி அழும் காட்சி அனைவரின் நெஞ்சையும் உலுக்குவதாக அமைந்துள்ளது. இந்த கோர விபத்தில் மேலும் ஒரு மாணவன் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வருவது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
14 year old Arun Tej died today in Andhra Pradesh.
He wasn’t doing any stunts or loitering in a dangerous zone….
Arun, a 10th class students at Salur Government High School in Manyam District, Andhra Pradesh died when the school wall collapsed!
He was AT SCHOOL!!!
He died… pic.twitter.com/XjwxZPCmMj— Revathi (@revathitweets) August 17, 2026
பள்ளிகளின் பாதுகாப்பற்ற கட்டடங்களைச் சீரமைக்கத் தவறிய அரசு அதிகாரிகளுக்கும் பொறுப்பற்ற நிர்வாகத்திற்கும் எதிராகப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். தனது ஒரே மகனை இழந்து தவிக்கும் அந்தத் தாயின் கண்ணீருக்கு யார் நீதி வழங்குவார்கள் என்ற கேள்வி தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அரசு உடனடியாக உரிய இழப்பீடு வழங்குவதோடு, மாநிலம் முழுவதும் உள்ள ஆபத்தான பள்ளிக் கட்டடங்களை உடனடியாக இடித்துப் பாதுகாப்பான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
