LATEST NEWS
“30 பேருக்கு பதவி கொடுங்க..!” ஸ்டாலினிடம் ஒற்றைக்காலில் நின்ற உதயநிதி.. குறுக்கே விழுந்து செக் வைத்த கனிமொழி… அறிவாலயத்தில் பரபரப்பு..!!!
திமுக உள்கட்சி விவகாரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கும் இடையே புதியதொரு அதிகார மோதல் மெல்ல மெல்லத் தலைதூக்கத் தொடங்கியுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் மிக உறைந்துபோகும் தகவல்களைப் பகிர்ந்துள்ளன. கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் பதவிகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ள இரண்டு முக்கிய பவர் சென்டர்களும் தீவிரமாக முயன்று வருகின்றனர். தனது தீவிர ஆதரவாளர்கள் 30 பேருக்கு மாவட்டப் பொறுப்பாளர் மற்றும் முக்கிய கட்சிப் பதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உதயநிதி ஸ்டாலின் அதிரடியாகக் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலினின் இந்த ஏதேச்சதிகாரமான கோரிக்கைக்குக் கடும் முட்டுக்கட்டைப் போடும் வகையில், “கட்சியில் எந்தவொரு பொறுப்பாளரையும் தன்னிச்சையாக நியமிக்கக் கூடாது. முறையான உள்கட்சித் தேர்தல் நடத்தியே தகுதியானவர்களை நியமனம் செய்ய வேண்டும்” என்று கனிமொழி மிகக் காட்டமாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். இந்த உள்கட்சிப் பதவி நியமன விவகாரம் தொடர்பாகத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைத் தனித்துச் சந்தித்த கனிமொழி, நீண்ட நேரம் தீவிரமாகத் தனது நியாயமான வாதங்களை முன்வைத்து விவாதித்ததாகத் தெரிகிறது. வாரிசு அரசியல் மற்றும் தன்னிச்சையான அதிகாரப் பகிர்வுக்கு எதிராக அறிவாலயக் கோட்டைக்குள்ளேயே வெடித்துள்ள இந்த வாரிசுப் போர், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் காரசாரமான விவாதப் பொருளாக மாறியுள்ளது
