இராவணனாக களமிறங்கும் ராக்கி பாய்.. அப்போ கே.ஜி.எப்-3 படத்தின் நிலைமை..? ரசிகர்களுக்கு டபுள் சர்ப்பிரைஸ் கொடுக்கும் யாஷ்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

இராவணனாக களமிறங்கும் ராக்கி பாய்.. அப்போ கே.ஜி.எப்-3 படத்தின் நிலைமை..? ரசிகர்களுக்கு டபுள் சர்ப்பிரைஸ் கொடுக்கும் யாஷ்..!!

Published

on

ராக்கிங் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் யாஷ் மோகினி மனசு, ராஜதானி, ஜானு, நாடகம் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்தார். இந்தியா முழுவதும் யாஷ் பிரபலமானதற்கு காரணம் கே.ஜி.எஃப், கே.ஜி.எஃப் 2 படங்கள் தான். யாஷ் நடிக்க உள்ள 19-வது படத்தை மலையாள இயக்குனர் கீது மோகன் தாஸ் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த படம் மாறுபட்ட கதைகளத்தை கொண்ட படமாக இருக்கும் என கூறப்படுகிறது. கீது மோகன் தாஸ் ஹிந்தியில் நவாசுதீன் சித்திக் நடித்த லயர்’ஸ் டைஸ் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படங்கள் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. மேலும் நிவின் பாலி நடிப்பில் மூத்தோன் என்ற படத்தையும் கீது மோகன்தாஸ் இயக்கியது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

இந்நிலையில் இயக்குனர் ரித்திஷ் திவாரி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ராமாயணத்தை மூன்று பாகங்களாக எடுக்க போவதாக அறிவித்தார். இந்த படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், நடிகை சாய்பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர்.

முக்கியமாக கே.ஜி.எஃப் யாஷ் ராமாயணம் படத்தில் ராவணனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. மேலும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற 2025-ஆம் ஆண்டு கேஜிஎப் 3 திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in