Uncategorized
நள்ளிரவில் காருக்குள் வைத்து, தன் மூன்றாவது கணவருக்கு, வனிதா கொடுத்த சர்ப்ரைஸ்..! இவ்ளோ ரணகளத்துலேயும் ஒரு குதூகலம்..! தீயாய் பரவும் வீடியோ..!
நடிகை வனிதா விஜயக்குமார் நள்ளிரவில் குடும்பத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படத்தினை இணையத்தில் நேற்றைய தினம் அவர் வெளியிட்டுருந்தார். மேலும் இதனை தொடர்ந்து தற்போது ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார் வனிதா. தற்போது ஊரடங்கு அமுலில் உள்ளதால் பீட்டர்பாலின் பிறந்தநாள் கொண்டாட வெளியே செல்ல முடியாத சூழலில் அவர் காரில் வைத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார் நடிகை வனிதா.
மேலும், “ஹேப்பி பர்த்டே மை லவ்”.. குட்டிஸ் கேங்குடன் நள்ளிரவு கொண்டாட்டம் என்றும் தெரிவித்துள்ளார் அவர் . இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து கூறியுள்ளனர். இதேவேளை, ஊரடங்கு நேரத்தில் அவருக்கு கோவில் தரிசனம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் நள்ளிரவில் காருக்குள் இருந்து வெளியிட்ட இரண்டு காணொளியும் இணையத்தில் தற்போது தீயாய் பரவி வருகின்றது என்று சொல்லலாம்.
அதேவேளை, நடிகை வனிதாவை சுற்றி பல சர்ச்சைகளும், விமர்சணங்களும் எழுந்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல் அவரின் குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது என்று தான் சொல்ல வேண்டும். அவர் வெளியிட்டுள்ள அந்த காணொளி இதோ,,,
